போகர் சப்தகாண்டம் 1531 - 1535 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1531 - 1535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1531. நன்றான ரீங்கார மோங்காரத்தை நலமுடனே வஷ்டதிசை வாசல்போடு
குன்றான வயிரவனை முன்னேவைத்து கூறுவாய் யங்சிங்வங் கென்றேயோது
பன்றான சதுர்வாசல் தூபதீபம் பாகுடனே பாணக்கம் பகுந்தவன்னம்
வன்றான வுருதானும் லட்சமோது வயிரவனார் பூசையது வகுத்தவாறே   

விளக்கவுரை :


1532. வாரான வாதமது முடிந்தாரானால் வளமுடனே வயிரவன் பூசைவேண்டும்
சீரான தங்கமது பலிக்கும்பாரு ஜெகத்தினிலே சித்தர்களுஞ் செய்வாரப்பா
கூரான புத்தியுடன் குருபதத்தை கொப்பனவே தான்வணங்கி நிற்கவேண்டும்
காரான காலாங்கி நாதர்பாதம் கடாட்சித்துத் தொழுகவென்று பாடினேனே

விளக்கவுரை :

[ads-post]

1533. பாடினேன் முத்துயென்ற வைப்புசொல்வேன் பாங்குபெற மாணாக்கள் பிழைக்கவென்று
தேடியே முத்தினுட சிப்பினோட்டை தெளிவான வெண்மைநிறம் போன்றதாக
கூடியே ஒருசேருதானெடுத்துக் குடிலமுடன் தானிடித்து பிழிந்துகொண்டு
ஆடியே நவநீதம் வெண்ணைப்போல அப்பனே தானெடுத்து வளமைசெய்யே

விளக்கவுரை :


1534. வளமையென்ன சொல்லவென்றால் பயணங்கேளு வாகான நீதமுடன் குடோரிகாரம்
பளமையாம் கட்டினதோர் காரந்தானும் படிகமாம் சீனமென்ற பதியினுப்பு
மளமையாமிதுவெல்லாஞ் சரியாய்க்கூட்டி மார்க்கமுடன் மூசையிட்டு சீலைசெய்து
தளமையா யுலையிலிட்டு வுருக்கிப்பாரு தளுக்கான முத்துபோல் வெளுக்கும்பாரே

விளக்கவுரை :


1535. வெளுப்பான மத்ததனை யுடைத்துப்பாரு வெகுளாமல் சிறுமணியாங் கருவுகட்டி
பளுக்கான மூசையிட்டு வுருக்கித்தீரு பாலகனே கருக்களிலே துவாரமிட்டு
சுளுக்கான கருக்களிலே வார்ப்பாயானால் சூட்சமுடன் முத்ததுவும் பாய்ந்துநிற்கும்
தளுக்கான முத்ததனை யெடுத்துக்கொண்டு தண்மைபெற ராஜரிடம் சென்றுபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar