1556. சொல்லவே சாரமென்ற
ஜெயநீர்தன்னால் சுறுக்குடனே தானுருக்கி சாய்ப்பாயானால்
கொல்லவே
வயமதுவுஞ்சவுடுநீங்கி குணமாகும் களிம்பூர லற்றுப்போகும்
வெல்லவே
செந்தூரஞ்செய்தாயானால் மிக்கான காயத்துக்குறுதியாகும்
புல்லவே தேனதிலே யுண்டுபாரு
புகழான தாதுக்களும் வலுத்துப்போச்சே
விளக்கவுரை :
1557. போச்சென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் லிங்கமது பலந்தானொன்று
போச்சொன்று மில்லாமல்
பீங்கானுக்குள் பேரானபாலதனை விட்டுமைந்தா
நீச்சென்ற பாலதனால்
சுறுக்குத்தாக்கு நெடிதான லிங்கமது சுத்தியாச்சு
மாச்சென்ற பழரசமும்
நாழியாகும் மகத்தான தேனதுவும் நாழியாமே
விளக்கவுரை :
[ads-post]
1558. நாழியாம் மேனிச்சார்
நாழியாகும் நலமான கையான்சாற் நாழியாகும்
தாழியாம் இலைச்சாறு
நாழியாகும் தாக்கான வாதளையின்சாற் நாழியாகும்
கோழியா மிலைமூலிச்சாற் நாழி
கொடிதான முசுக்கையுட சாறுநாழி
வாழியாம் படாமூலிச்சாறுநஅழி
வளமான கழற்சிக்காய் நாழியாமே
விளக்கவுரை :
1559. ஆமேதான் பூலாவுஞ்சாறுநாழி
அப்பனே வாதண்டைச்சாறு நாழி
வேமேதான் கொடிக்கள்ளிச்
சாறுநாழி வாரைவான தும்பைமலர்ச்சாறுநாழி
காமேதான் பூப்பனையின்
சாறுநாழி கருவான விளாவிலையுஞ்சாறு நாழி
போமேதான் பூப்பனையின்
சாறுநாழி பொலிவான கஞ்சாவின் சாறுமாமே
விளக்கவுரை :
1560. நாறான குமரிச்சார்
நாழியாகுஞ் சதாவேரி மூலியது சாறுநாழி
வேறான முசுட்டையுட சாறுநாழி
மிக்கான கவுதும்பை சாறுநாழி
கூறான மத்தங்காய் சாறுநாழி
குணமான சிவதைவேர் சாறுநாழி
பாறான தேட்கொக்கு சாறுநாழி
பாங்கான முருக்கன்சாற் நாழிகூட்டே
விளக்கவுரை :

