போகர் சப்தகாண்டம் 1601 - 1605 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1601 - 1605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1601. பாரேதான் தீயாறியெடுத்துப்பார்க்க பதனமா செந்தூர மென்னசொல்வேன்
சீரேதான் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று திறமாகத் தானுருக்கிக் கொடுத்துத்தீரு
நேரேதான் கரியோட்டில் வூதிப்போடு நேர்ப்புடனே தங்கமது நாலுக்கொன்று 
வாரேதான் சேர்த்துருக்கி புடத்தைப்போடு மகத்தான வேதையிது சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


1602. சொல்லவே சித்தர்செய்யும் வேதைமார்க்கம் ஜெகத்தினிலே மானிடர்கள் செய்வாரோதான்
பல்லவே கருவாளி செய்வான்பாரு பூதலத்தில் முழுமக்கள் செய்யப்போமோ
வெல்லவே காலாங்கி நாதர்பாதம் விருப்பமுடன் தாள்பணிந்து செய்யலுற்றேன்
நல்லதொரு ஞானவானாகவென்றால் நானுரைத்த நூலதனை யறிவான்காணே

விளக்கவுரை :

[ads-post]

1603. தானான பிரகாசமான போகர் சதகோடி சூரியர்போல் பிரகாசிப்பார்
கோனான குருவருளால் தன்னைப்பார்த்து கூறுவேன் யின்னமொரு குருவைக்கேளாய்
வேனான அயமதுதான் ராவிமைந்தா விபரமுடன் பழச்சாற்றில் வூறவைத்து
வூனான அமுரினால் கழுவிப்போட்டு வுத்தமனே யதில்சேர்க்க மருந்துகேளே


விளக்கவுரை :

1604. கேளடா அயப்பொடிக்கு ரெட்டிமைந்தா கெணிதமுடன் துருசுடனே காரமாகும்
வாளடா கெந்தகமும் சூடன்வீரம் மார்க்கமாய் யப்பொடிக்கு நாலுக்கொன்று
கோளடா வாராமல் யெல்லாங்கூட்டி குமுறவே சம்பழத்தின் சாற்றாலாட்டி
காளடா வச்சிரமாங் குகையில்வைத்து கலங்காமல் வுலையில்வைத்து வூதிடாயே

விளக்கவுரை :


1605. ஊதிடவே அயமதுதான் சரக்குச்சேர்த்து வுண்மையுடன் செம்பதுவாய் வுருகிநிற்கும்
நீதியாம் அயமதுதான் செம்பேயானால் நிலைத்துதடா வாதவித்தை நிஜமதாச்சு
ஆதியாம் அயமதுனால் சகலசித்தும் அப்போதே சித்தியடா தப்பேயில்லை
ஜொதியாங் குருபரந்தன்னருளினாலே சுத்தமுள்ள அயத்தினுட செம்பைவாங்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar