1606. வாங்கியே செம்புநிகர்
தங்கஞ்சேர்த்து வரிசையுடன் தானுருக்கி வைத்துக்கொண்டு
ஏங்கியே திரியாதே
மைந்தாநீதான் இன்பமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
ஓங்கியே தானெடுத்து
வுருக்கிப்பாரு வுறுதியாம் மாற்று பனிரண்டதாகும்
பாங்குபெற ஜொதிமயந்
தன்னைக்காணில் பாலகனே சிவயோகம் பலிக்குந்தானே
விளக்கவுரை :
1607. தானான பொதிகைமலை
வைப்புசொல்வேன் தாக்கான தென்பொதிகைதன்னிலோரம்
வேனான மடாலயமண்டபந்தான்
வெளியான சுனைகரைகளங்குமுண்டு
பானான வாய்க்கால்
மண்டபத்தில் படியோரம் வோராளின் மட்டந்தன்னில்
கோனான குருகூட்டம்
சித்தர்கூட்டம் கோடான கோடிபொருள் வைத்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
1608. வைத்திட்ட திரவியங்கள்
மெத்தவுண்டு மானிலத்தில் சித்தர்வைப்பு யார்தான் காண்பார்
கைத்திட்ட திரவியத்தை
யெடுக்கவென்றால் கதவுடனே தாளனைத்து சீலுமாட்டி
மெய்த்திட்ட காப்பனென்ற
காத்தராயன் மேல்வாசல் தனில்காவல் வீற்றிருப்பான்
மைத்திட்ட வடபுரத்தில்
பூதங்காவல் மானிடர்கள் யாரேனுஞ் சொல்லார்பாரே
விளக்கவுரை :
1609. பாரேதான் திரவியத்து யெடுக்கவென்றால் பராசத்தியுட கிருபையதுபெறவேவேண்டும்
சீரேதான்னன்நடக்கை கொள்ளவேண்டும்
சீர்தப்பி தீவிணையை யகற்றவேண்டும்
நேரேதான் மனோன்மணியாள்
பூசைவேண்டும் நெறிமுறைமை தவறாத வருளேவேண்டும்
கூரேதான் சிற்பரத்தை
நாடவேண்டும் கோடியுகந்தானிருக்க கற்பந்தேடே
விளக்கவுரை :
1610. தேடவே கையாளின் மூலிதானும்
தெளிவான நற்கையாள் மூலிதானும்
கூடவே மேனியுட மூலிதானும்
குணமான கஞ்சாவின் மூலிதானும்
நாடவே கருவேளிமூலிதானும்
நலமான வெள்வேலி மூலிதானும்
சாடவே பேய்விரட்டி
மூலிதானும் சாங்கமுடன் விரலியான் மூலியாமே
விளக்கவுரை :

