போகர் சப்தகாண்டம் 1701 - 1705 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1701 - 1705 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1701. ஆச்சப்பா பூநீறுயெடுக்குமார்க்கம் அப்பனே வதிசொல்வேன் மதியாய்கேளு
பேச்சப்பா சித்தருட சாத்திரத்தில் பிரட்டான கைமறைப்பு வதீதமெத்த  
காச்சவே பூநீரை யெடுக்கும்சைகை கருவாகச் சொல்லவில்லை சாத்திரத்தில்
பாச்சலுடன் காலாங்கி வையர்பாதம் கருணையுடன் தாள்பணிந்து உறுகுவேனே

விளக்கவுரை :


1702. கூறுவேன் பங்குனியாம் பருவந்தன்னில் குறிப்புடனே நாதாக்கள் சொன்னமார்க்கம்
மாறுபடு பேதனங்கள் கண்டாராய்ந்து மதிதலத்தில் பூநீறு காய்க்குங்காலம்
வேறுடனே ராக்காலஞ் சாமத்திலிப்பமுடன் காட்டகத்தே சென்றுமேதான்  
சாறுடனே காடெல்லாம் திரிந்துபார்த்தால் சதிரான பூநீறு பூர்க்குந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1703. பூர்க்குமே பூநீறு கதிர்போலாகும் பொங்கமுடன் தானெழும்பி மலர்போல்வீழும்
நிர்க்குமே விடியநற்சாமந்தன்னில் நிலையாது பூநீறு காரம்போச்சு
தீர்க்கமுடன் காரமதுயில்லாவிட்டாலும் தெளிவான பூநீரைவாரிவந்து
மார்க்கமுடன் தான்கரைத்து தெளிவிறுத்தி மயங்காமல் தீட்சையது பத்துசெப்பே

விளக்கவுரை :


1704. செய்யவே யின்னமொரு வயணங்கேளு செழிப்பான சித்திரையாம் பருவகாலம்
பையவே பூரணையாம் பட்சந்தன்னில் பாங்கான நடுச்சாம வேளைபார்த்து
மெய்யவே பூநீறுவிளையுமார்க்கம் மேன்மையுடன் கண்டறிந்துயெடுக்கும்போது
தொய்யவே தேவதையின் பூசைவேண்டும் தோராமல் வட்சரத்தை மாறிக்கொள்ளே

விளக்கவுரை :


1705. கொள்ளவே தீட்சைவிதி மார்க்கந்தன்னை குறிப்பாகத் தான்செய்துமுடிப்பாயானால்
எள்ளளவுங் கோளாறுநேராதப்பா என்மகனே குருமுடிக்கும் வகையைத்தேடு
விள்ளவே பூமியுட வளமுஞ்சொன்னேன் விருப்பமுடன் நாதாக்கள் துறையுஞ்சொன்னேன்
மெள்ளவே யெந்நூலேழாயிரந்தான் மேன்மையுடன் கண்டறிந்து யோகந்தேடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar