போகர் சப்தகாண்டம் 1736 - 1740 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1736 - 1740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1736. ஈடான தேசமதுகண்டோருண்டோ யெழிலான மாபுரமும் தங்கவர்ணம்
கோடாகோடி பொருள்களங்குண்டு குகையுண்டு சுனையுண்டு தடாகமுண்டு
ஊடான மிருகங்களனேகமுண்டு வுத்தமனே புலிபசுவுமொன்றோடொன்று
காடான வனாந்திரத்தி லுறவுகொண்டு கருணையுட னெப்போதும் குடியுமாமே

விளக்கவுரை :


1737. ஆமேதான் கோட்டைக்குள் குளிகைபூண்டு அப்பனே சுரங்கத்தின் வழியாக
நாமேதான் சென்றல்லோ பார்க்கும்போது நாட்டமுட னரசாட்சி கொலுக்கூடந்தான்
போமேதான் கிட்டயல்லோ சென்றுநின்றேன் பொலிவான நவரத்தினங் கசிதத்தாலே
மாமேதான் பிரதமைகள் சூழ்ந்துநிற்க மயக்கமுடன் சிம்மாதனங் கண்டேன்தானே

விளக்கவுரை :

[ads-post]

1738. தானான மேற்புறத்தில் பக்கஞ்சென்றேன் தாக்கான கொலுமாளி சலவைக்கூடம்
வேனான கற்றூணாம் வயிரக்கல்லாம் வெழிலான பக்கமெல்லாம் பச்சைக்கல்லாம்
மானான தேவதச்சன் மயனினாலே மார்க்கமுடன் புஷ்பரதமொன்று கண்டேன்
கானான கைலாசமென்பார்தானுங் காசினியிற் கண்டவரை விண்டிலேனே

விளக்கவுரை :


1739. விண்ணவே தலைவாசல் பக்கம்போனேன் விராஜனிடகாவல் கணமாயிரம்பேர் 
திண்ணமுட னங்கிருந்தார் தவசியோர்கள் தீர்க்கமுட னெந்தனையுங் கண்டிட்டார்கள்
எண்ணமுடன் யானுமல்லோ கண்டபோது எனைக்கொல்ல திருஷ்டித்துப் பார்த்தாரென்னை
அண்ணலென்ற காலாங்கி தனைநினைந்தேன் அப்போதே யெந்தனையுஞ் சூழ்ந்திட்டாரே

விளக்கவுரை :


1740. சூழவே யடியேனுங் கிடுகிடுத்து துப்புறவாய் தாள்பணிந்து சரணஞ்சொன்னேன்
தாழவே காவற்காராயிரம்பேர் சார்புடனே யெந்தனையுமாரென்றார்கள்
மீளவே யானுமல்லோ தீரங்கொண்டு மேன்மையுட னவர்களுக்கு வதீதஞ்சொன்னேன்
ஆளவே யெந்தனையும் வரலாறுகேட்டார் அப்பனே அடிமுதலு முரைத்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar