1746. அமர்ந்திட்ட தின்னமொரு மார்க்கங்கேளு அப்பனே குளிகையது பூண்டுகொண்டு
தமர்ந்திட்ட வகஸ்தியனார்
மலையைக்கண்டேன் தாக்கான மலையோரம் சென்றபோது
கமர்ந்திட்ட சித்தர்முனி
கோடானகோடி கண்டிட்டா ரெந்தனையும் யார்நீயென்றார்
சுமர்ந்திட்ட காலாங்கி
நாதர்பாதம் சுடரொளியின் பதாம்புயத்தை நினைத்தேன்பாரே
விளக்கவுரை :
1747. நினைத்துமே காலாங்கி சீஷனென்றேன்
நேரான போகரிஷி யென்பேரென்ன
முனைத்துமே சித்தரெல்லா
மொன்றாய்கூடி முனையான வகஸ்தியனார் பக்கல்சென்று
தினைப்புடனே வாய்பொத்தி
கரங்குவித்து தேவனே சாஷ்டாங்கஞ் சரணமென்றார்
பனைப்புடனே வகஸ்தியருங்
கண்டுமேதான் பட்சமுடன் தானுரைப்பார் சித்தர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
1748. சித்தர்முனி
ரிஷிமுதலோரொன்றாய்க்கூட்டி தெட்சணாமூர்த்தியிடம் வந்ததென்ன
சத்தமுடனெ ல்லவரு
மொன்றாய்ச்சேர்ந்து சதாசிவமே சுடரொளியே தயாளவானே
பத்தியுடன் காலாங்கி
சீஷனென்று பாரினிலே பேர்படைத்த சித்துவொன்று
முத்திபெற தங்களிடங்
காணவென்று முறைமையுடன் குளிகைகொண்டு வந்திட்டாரே
விளக்கவுரை :
1749. வந்திட்டா ரென்றதுமே கும்பமுனி வாகுடனே வருகவென்று விடைதந்தாரே
பந்திட்ட யெந்தனையும்
பட்சம்வைத்து பாருடனே குகைக்குள்ளே கொண்டுசென்று
முந்திட்ட சாத்திரங்க
ளெல்லாங்கேட்டார் மோசமில்லை யென்றென்னைக் கொண்டணைத்து
தந்திட்டா ரெந்தனுக்கு
நூலுமீய்ந்தார் சதகோடி வித்தைகளுங் கற்பித்தாரே
விளக்கவுரை :
1750. கற்பித்தார் பிரமனென்ற
வித்தைதானும் கருவான யேமத்தின் வித்தைதானும்
உற்பித்த சாத்திரத்தி
னுளவையெல்லாம் ஒன்றாகத் தானெடுத்து உபதேசித்தார்
கற்பித்த
கருவுகரணாதியெல்லாம் மார்க்கமுடன் தான்கொடுத்தார் உவமையாக
தற்பித்து செய்துமல்லோ
புத்திகூறி சகலகலைக்கியான மோதிட்டாரே
விளக்கவுரை :

