2196. அமேதான் தயிலமதை செப்பக்கேளு
அப்பனே மேற்சொன்ன வுப்பைமைந்தா
தாமேதான் மட்டமென்ற
பொன்னுமேலே தகைமைபெற வாரடித்துப்பூசுபூசு
வேமேதான் செந்தூரத்
தயிலத்தாட்டி விருப்பமுடன் பூசியல்லோ புடத்தைப்போடு
நாமேதான் சொன்னபடி
மாற்றுகாணும் நாதாக்கள் செய்கின்ற வேதையாமே
விளக்கவுரை :
2197. வேதையிலே யின்னமொரு பாகங்கேளு மேன்மைபெற லிங்கமது கட்டிவாங்கி
போதையிலே நாகமொருகட்டிவாங்கி
பொலிவாக நாகத்தை சுத்திசெய்து
பாதையிலே சூதமிடை நாகஞ்சேரு
பாங்கான நாகமிடை வீரஞ்சேர்த்து
ஊதையிலே தானுருக்கி
யெடுத்துமைந்தா வுத்தமனே சாரமிட்டு அரைத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
2198. அரைக்கையிலே நாற்சாமம்
செயநீராகும் அப்பனேவந்நீரை செப்பக்கேளு
முரையுடனே லிங்கமது
சுறுக்குதாக்கு முனையான லிங்கமது கட்டிப்போகும்
திரையுடனே பாகமது
பிசகாவண்ணம் செப்புகிறேன் நாகமது தகடதாக்கி
வரைபோல லிங்கத்தைவுமிநீராலே
வளமுடனே யெழைப்பாய் மைந்தாகேளு
விளக்கவுரை :
2199. கேளேநீ லிங்கத்தை
தகட்டிற்பூசு கிருபையுடனே வோலையளவாகப்பூசு
பாளேதான் போகாமல்
ரவியிற்போடு பாலகனே வெள்ளியென்ற ரேக்கடித்து
தூளேதானாகாமல் தகட்டைவாங்கி
துப்புறவாய் நாகத்தின் தகட்டின்மேல்கீழ்
சூளேதான் வைத்துமல்லோ
சீலைசெய்து துப்புரவாய் வைந்தெருவில் புடத்தைப்போடே
விளக்கவுரை :
2200. போடவே நாகமது வர்ணமிஞ்சி
போக்கான லிங்கத்தைக் கட்டிக்கொண்டு
கூடவே லிங்கமது ஓடாமற்றான்
குமுறவே வெள்ளியென்ற ரேக்கின்மேலே
மூடவே வர்ணமது தணலாயேறி
மோசமில்லை யாறுமாத்தாகும்பாரு
நாடவே ரேக்கதனை
யெடுத்துமைந்தா நயமுடனே தானுருக்கி யெடுத்திடாயே
விளக்கவுரை :