2201. எடுத்துமே வாரடித்துப்
புடத்தைப்போடு எழிலாகப்புடமதுவும் முன்போலாகும்
தொடுத்துமே முன்போல
புடத்தைப்போடு துப்புரவாம் புடமதுவும் அதிகமாகி
விடுத்துமே மாற்றதுவும்
அதிகங்காட்டும் மிக்கான பொன்னதுவும் பசுமையாகி
அடுத்துமே நாலுக்கோர்
தங்கஞ்சேர்த்து அப்பனே வாரடித்துப் புடத்தைப்போடே
விளக்கவுரை :
2202. புடமாறி யெடுத்துப்பார்
பொன்னேதங்கம் புஷ்பம்போல் குங்குமது நிறமேயாகும்
திடமான தங்கமது
பிறப்பேயாகும் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கு
சடமழியாக்
கற்பமதுவுண்டுகொண்டு சதாகாலம் நிஷ்டையிலே இருப்பாயப்பா
மடமானின் ஆசைதனைவிட்டொழித்து
மகிழ்ச்சியுடன் எப்போதும் வாழலாமே
விளக்கவுரை :
[ads-post]
2203. வாழலாம் சித்தர்முனி
ரிஷிகள்மெச்ச வாகுடனே சீனபதிமாந்தர்க்கப்பா
நீழவே பூமிதனில் பரிகளில்லா
நெடிதான ரதமதுதான் போவதற்கு
தாழவே சூஸ்திரங்கள்
சொல்வேனப்பா கருவூரார் சித்தர்முனி கமலர்தாமும்
சாழவே யொருவருஞ் சொன்னதில்லை
சாங்கமுடன் போகரிஷி சொன்னேன்பாரே
விளக்கவுரை :
2204. பாரேதான் ராஜாதிராஜர்மெச்ச
பாரினிலே வஸ்வமில்லா வண்டியோட
நேரேதான் சக்கரமும் ஆதராகும்
நெடிதான இரிசியது மூன்றதாகும்
கூரேதான் குருக்கவட்டம்
எட்டதாகும் குறிப்புடனே வடிவட்டம் நாலதாகும்
தேரேதான் படிவட்ட
மூட்டிக்கொண்டு திறமான மேல்வட்டம் பூட்டக்கேளே
விளக்கவுரை :
2205. பூட்டவே விரிசியது
விட்டங்கொண்டு புகழான கல்லாணி இரும்புமாட்டி
மாட்டியதோர் இரும்பு
குவலயமிட்டு மார்க்கமுடன் சுத்துபுரம் கம்பிமாட்டி
நீட்டமுடன் நாற்சதுர
மத்திவட்டம் நெடியதொரு குழலொன்று முனையில் வைத்து
வாட்டமுடன் மத்தகஜம்
தலையுண்டாக்கி வளமுடனே தலைகுழையில் சில்லுபோடே
விளக்கவுரை :