2211. போகவே கைசுழலல்
மறைதிருவலப்பா பொங்கமுடன் நீராவிதன்னில் மிகச்சார்ந்து
பாகமுட னக்கினியின்
காற்றதுவுமொடுங்கி பறந்துமே பெருங்குழாதன்னில் மிகச்சார்ந்து
சாகமுடன் சூத்திரங்கள்
கண்டுமிகத்திருப்ப கற்ச்சனையாமாவியுடன் பறந்துமிகவோடும்
தாகமெனும் பாணியினால்
யாவிமுதலெல்லாம் தட்டொடுங்கி குழல்தனிலே தவித்துமிகப்போமே
விளக்கவுரை :
2212. போமேதான் பஞ்சபூதமிதி
லொடுக்கம்பாரு போக்கான வாயுதனில் தேயுமிகச்சார்ந்து
வேமேதான் தேயுவிலே
வுப்புமிகக்கலந்து வேகமுடனவிதனை விளைவிக்கும்பாரு
தாமேதான் பிரிதிவிதனில்
வாகாஷமொடுங்கி தாரிணியினுள்ளடக்க பெட்டிமிகவாச்சு
நாமேதான் சொன்னபடி
பஞ்சகர்த்தாள் நாட்டினேன் தேவரதம் நாட்டினேனே
விளக்கவுரை :
[ads-post]
2213. நாட்டினேன் நாதாக்கள்
கண்டதில்லை நலமுடனே நூலாதிநூல்களெல்லாம்
வாட்டமுடன் கண்டறிந்து
வுளவுபார்த்து வளமுடனே செய்துவைத்தேன் சீனந்தன்னில்
தாட்டிகமாய் சீனபதி
மூன்றுகாதம் தாரணியில் சுத்திவந்து வினோதஞ்செய்தேன்
ஓட்டமுனி மையகிரி
யோரஞ்சென்றேன் ஓகோகோக்கோ நாதாக்கள் ரிஷிகண்டேனே
விளக்கவுரை :
2214. கண்டேனே கோடிமுனி சித்தரப்பா
கைலங்கிரி வாசரைப்போல் கோடாகோடி
தெண்டமுட னடியேனும்
காலாங்கிதம்மை தெளிமையுனானினைத்து சித்தர்தம்மை
கொண்டபடி செனங்களெல்லாம்
ஏத்திக்கொண்டு கோர்வையுடன் ஆயிரமாம்ரதங்கள் மாட்டி
அண்டர்முனி ராட்சதர்கள்
கிடுகிடுக்க அவனியெலாம் சுத்திவந்தேன் அன்பாய்த்தானே
விளக்கவுரை :
2215. தானான ரோமபுரி சுத்திவந்தேன்
தாக்கான யெண்ணாயிரங் காதமப்பா
வேனான சித்தர்தனை
ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா
கோனான குருசாமி
காலாங்கிநாதர் கொற்றவனாம் ரோமாபுரிராசர்தானும்
பானான சமாதியிட
இடமுங்கண்டேன் பட்சமுடனவ்விடத்தி லிறங்கினேனே
விளக்கவுரை :