2221. தானான மார்க்கமது
யின்னஞ்சொல்வேன் தகமையுள்ள எருசலேம் நகரத்திற்கு
வேனான காலாங்கி நாயர்பாதம்
விருப்பமுடன் தான்வணங்கியடியேன்தானும்
பானான குருபரனை வணங்கியானும்
பார்க்கவே எருசலேம் போகவென்று
மானான மாதாவைக்காணவென்று
வணங்கினே னவர்பாதம் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
2222. தொழுகையிலே
அசரீரிவாக்கியந்தான் தொடர்ந்துமே யவரிடத்தில் பிறந்ததாச்சு
எழுந்துமே புகைரதத்தை
நடத்திக்கொண்டு ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு
செழுமையுடன் தேசமெல்லாம்
சுற்றிவந்து சீர்பெறவே தானிறங்கி வடியேன்தானும்
பழுதுமிக நேராமல்
குளிகைபூண்டு பட்சமுடன் மலைமீதிற் சென்றேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
2223. சென்றுமிகப் பார்க்கையிலே
குகைகள்வுண்டு சிறந்ததொரு குகைதனிலே மனுங்குமார்கள்
குன்றின்மேல் கோடானகோடி
பேர்கள் கொடுத்தபசியம்கிருந்தார் லக்கோயில்லை
தன்றான நபியுடைய சீஷவர்க்கம்
சார்பாக ஒருபக்கம் தவமிருப்பார்
பன்றான சீஷர்களனேகமுண்டு
படைபொருத யென்மேலே வந்தார்தானே
விளக்கவுரை :
2224. வந்தாரே நபியுடைய
சீஷவர்க்கம் வளமையுடன் கோடிபேர் சூழ்ந்தாரப்பா
சுந்தரனே யாரென்று
கேட்களுற்றார் சுடரொளிபோல் சொரூபமதைக் காணும்போது
எந்தனுக்கு பயங்கொண்டு
நடுக்கலாகி என்மகனே காலாங்கிசீஷனென்றேன்
அந்தமுடன் எந்தனையும்
பெரும்பாலாக வாதரித்து கோபமதை தணித்திட்டாரே
விளக்கவுரை :
2225. தணிந்தபின்பு எந்தனையும் எங்கேவந்தாய் தயவுள்ள சிறுபாலா கூறுமென்ன
கணிதமுட னடியேனும்
புகைரதங்கள் காசினியில் யாரேனும் அதிசயிக்க
துணிவுடனே சித்தர்முனி
ரிஷிகள் தம்மைச் சுகமுடனே தானேத்தி சீனந்தன்னில்
அணியணியாய்க் கொண்டுசென்று
அனியெல்லா மவரவர்க்கு வதிசயத்தைக்காட்டினேனே
விளக்கவுரை :