போகர் சப்தகாண்டம் 2221 - 2225 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2221 - 2225 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2221. தானான மார்க்கமது யின்னஞ்சொல்வேன் தகமையுள்ள எருசலேம் நகரத்திற்கு
வேனான காலாங்கி நாயர்பாதம் விருப்பமுடன் தான்வணங்கியடியேன்தானும்
பானான குருபரனை வணங்கியானும் பார்க்கவே எருசலேம் போகவென்று
மானான மாதாவைக்காணவென்று வணங்கினே னவர்பாதம் தொழுதிட்டேனே

விளக்கவுரை :


2222. தொழுகையிலே அசரீரிவாக்கியந்தான் தொடர்ந்துமே யவரிடத்தில் பிறந்ததாச்சு
எழுந்துமே புகைரதத்தை நடத்திக்கொண்டு ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு
செழுமையுடன் தேசமெல்லாம் சுற்றிவந்து சீர்பெறவே தானிறங்கி வடியேன்தானும்
பழுதுமிக நேராமல் குளிகைபூண்டு பட்சமுடன் மலைமீதிற் சென்றேன்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

2223. சென்றுமிகப் பார்க்கையிலே குகைகள்வுண்டு சிறந்ததொரு குகைதனிலே மனுங்குமார்கள்
குன்றின்மேல் கோடானகோடி பேர்கள் கொடுத்தபசியம்கிருந்தார் லக்கோயில்லை
தன்றான நபியுடைய சீஷவர்க்கம் சார்பாக ஒருபக்கம் தவமிருப்பார்
பன்றான சீஷர்களனேகமுண்டு படைபொருத யென்மேலே வந்தார்தானே

விளக்கவுரை :


2224. வந்தாரே நபியுடைய சீஷவர்க்கம் வளமையுடன் கோடிபேர் சூழ்ந்தாரப்பா  
சுந்தரனே யாரென்று கேட்களுற்றார் சுடரொளிபோல் சொரூபமதைக் காணும்போது
எந்தனுக்கு பயங்கொண்டு நடுக்கலாகி என்மகனே காலாங்கிசீஷனென்றேன்
அந்தமுடன் எந்தனையும் பெரும்பாலாக வாதரித்து கோபமதை தணித்திட்டாரே

விளக்கவுரை :


2225. தணிந்தபின்பு எந்தனையும் எங்கேவந்தாய் தயவுள்ள சிறுபாலா கூறுமென்ன
கணிதமுட னடியேனும் புகைரதங்கள் காசினியில் யாரேனும் அதிசயிக்க
துணிவுடனே சித்தர்முனி ரிஷிகள் தம்மைச் சுகமுடனே தானேத்தி சீனந்தன்னில்
அணியணியாய்க் கொண்டுசென்று அனியெல்லா மவரவர்க்கு வதிசயத்தைக்காட்டினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar