2226. காட்டிவந்தேன்
சீனபதிதனிற்சென்றேன் கடவுளாமேசுவின்தன் காட்சிகண்டேன்
வாட்டமுடன் பீமார்கள்
சீஷவர்க்கம் வகையுடனே காணவென்று திரும்பிசென்றேன்
காட்டமுடன் புகைரதத்தை
மாட்டிக்கொண்டு நலமுடனே எருசலேம் காணவந்தேன்
மாட்டிமையாய் குளிகையது
பூண்டுகொண்டு மாநபியைக்காணவென்று வந்திட்டேனே
விளக்கவுரை :
2227. வந்திட்டேன்
நபிபாதங்காணவந்தேன் வாகான சீனவர்க்கர் என்னைநோக்கி
செந்தமுடன் உபசரணைமிக்க
செய்து தேவனிங்கே இல்லையென்று வாக்குரைத்தார்
எந்தனுக்கும் மனஸ்தாபம்
மிகவுண்டாக்கி யென்சாமி நபிதனையே காணவென்று
நொந்துமனந் தானிருக்க
சீஷவர்கம் நோக்கமுற்று எந்தனுக்கு வழிசொன்னாரே
விளக்கவுரை :
[ads-post]
2228. சொன்னவுட னடியேனும்
அடிவணங்கி துணையாக சீஷவர்க்கம் கூட்டிக்கொண்டு
நன்னயமாய் புகைரதத்தில்
ஏத்தியேதான் நாதாந்த நபிதனையைக்காணவென்று
மன்னர்மெய்ச்சு
மக்காவாம்புரியைக் காணவகையுடனே நெடுந்தூரம் ரதம்திருப்பி
பன்னரகந்
தனிலோரஞ்சென்றுயானும் பட்சமுடன் புகைரதத்தை நிறுத்தினேனே
விளக்கவுரை :
2229. நிறுத்தினேன் அங்கிருந்தோர்
சேனைவர்க்கம் நிலையான புகைரதத்தை கண்டபோது
திருத்தமுடன் ஓடிவந்தார்
கோடிபேர்கள் திரளான நபிக்கூட்டம் அலுங்குவார்கள்
பருத்தமலைதனையோரம்
சமாதிபக்கம் பதுங்கியே காத்திருப்பார் சமாதிதன்னில்
வருத்தமுட னபிபாதங்காணவென்று
வந்திட்டேன் என்றதுமே எனைப்பார்த்தாரே
விளக்கவுரை :
2230. பார்த்துமே
நபிபாதங்காணவென்றேன் பட்சமுடன் கோரிக்குட் சென்றேனப்பா
நேர்த்தியாம் நவரத்தின
சமாதிக்குள்ளே நேர்மையுடன் நபியிருக்க சொன்னாரப்பா
தீர்த்தமுடன் ரொட்டியொன்று
யீய்ந்தாரப்பா தஇறமுடைய மனுமார்கள் ஆயிரம்பேர்
காத்திருந்தேன் நெடுநேரம்
அடியேன்தானும் கண்ணெதிரே ரூபமது கண்டிலேனே
விளக்கவுரை :