2236. செப்பவென்று யாக்கோபு
என்னைகேட்க தெளிவுடனே யானுமல்லோ விடையுஞ்சொல்லி
ஒப்பமுடன்
புகைரதத்திலேறிகல்கொண்டு உத்தமனே சீனபதிசென்றேன்யானும்
கப்பலெனும் நீராவிமார்க்கமாக
கடுந்தூரந் தீவுகளுஞ்சுத்திவந்து
மெப்புடனே
சீனபதிக்கரையிலப்பா மேன்மையுடன் இறங்கிவிட்டேன் பாலன்றானே
விளக்கவுரை :
2237. பாலனாம் யாக்கோபு
சித்தர்தாமும் பட்சமுடன் கமலமுனிதன்னைக்காண
சீலமுடன்றாகோப சாரந்தன்னால்
சிறப்புடனே சமாதியிடந் தன்னிற்சென்றார்
கோலமுனியானதொரு கமலர்தானும்
குவலயத்தில் சமாதியிலே இருந்தாரங்கே
ஞாலமுள்ள சித்தொளிவைக்
காணவென்று மகிழ்ச்சியுடன் சமாதியிடம் நெருங்கினாரே
விளக்கவுரை :
[ads-post]
2238. நெருங்கியே கமலரிட
சமாதிகண்டார் நேர்மையுடன் யாக்கோபு வணங்கிநின்றார்
கருங்கல்லுக்குள்ளிருந்த
சித்துதம்மைக் கண்ணாலே கண்டாராம் யாக்கோபப்பா
உருகவே யடிபணிந்து பக்கிரிதானும்
வுத்தமனார் வதமுனிபாதந்தொட்டு
தருதவே மெனக்குத்
தயைசெய்யென்று தாழ்மையுடன் கேட்டாராம் சித்தர்தாமே
விளக்கவுரை :
2239. தாமெனமே யாக்கோபு
கேட்கும்போது தயையுடனே கமலமுனி சாற்றலுற்றார்
பூமானம் யாக்கோபு மைந்தாகேளு
புகழ்ச்சியுடன் சொல்லுகிறேன் உந்தனுக்கு
நாமமுடன் தேசமெல்லாம்
சுத்திவந்தீர் நாதாக்கள் சித்தர்முனி ரிஷிகள்தம்மை
தாமமுடன வர்களிடம் வாதுபேசி
சமர்த்துடனே வென்றுவந்த பாலாகேளே
விளக்கவுரை :
2240. கேளப்பா வுலகத்தில்
கொடியசித்தர் கோடானகோடியுண்டு யிருப்பாரப்பா
தன்மையாய் அவர்களிடம்
பேசியல்லோ சாங்கமுடன் வுளவுகளை யறியவேண்டும்
ஞானமுடன் அவர்களுக்கு
தொண்டுசெய்து நளினமுடன் ஞானத்தை தெரியவேண்டும்
வேளாமையாய் எதிர்த்து
மிகவாயாடாதே வீண்வார்த்தை தாமிழுத்து சபிப்பார்தாமே
விளக்கவுரை :