2326. கேட்கவே வினோதமென்ற
வித்தைசொல்வேன் கெவுனமுடன் கருவாளியானால்கேளு
நீட்கமுடன் முட்டைதனில்
கதிர்சில்லாக்கி நீடான பனிஜலத்தை யதற்குள்தாக்கு
நாட்கமல செந்தாழம் பூரசத்தை
நளினமுடன் தானெடுத்து வுளுந்துசீலை
ஆட்கமுடன் வலுவாகத்
தானமைத்து அப்பனே ரவிதனிலே வைத்திடாயே
விளக்கவுரை :
2327. வைக்கவே கதிரோனின் சுடரினாலே
வாகான முட்டைக்குள்ளிருந்த நீராம்
மெய்க்கவே
சுடர்கண்டபோதேயப்பா மேலெழும்பி முட்டையது பறக்கும்பாரு
மொய்க்கவே பூமிவிட்டு
பறக்கும்போது மேன்மையுடன் மாந்தரெல்லாம் நடுங்குவார்கள்
செய்க்கவே வாச்சரியம்
இந்தப்போக்கு ஜெகதலத்தில் கிட்டாது சிவயோகிக்கே
விளக்கவுரை :
[ads-post]
2328. யோகியென்றால் ஞானத்தின்
மகிமைவேண்டும் யோசனைகள் மிகவேண்டும் வாசிவேண்டும்
போகமென்ற மாய்கையனை
விட்டொழிக்க பொருமையுடன் சிவயோகம் காணவேண்டும்
பாகமது யெப்போதும் கைவிடாமல்
பார்திபனே செய்குபவன் யோகியாவான்
சாகமுடன்
காலாங்கிதனைநினைத்து சாற்றினேன் போகரிஷி பண்பாய்த்தானே
விளக்கவுரை :
2329. பண்பான வித்தையது
சாற்றக்கேளு பாரினிலே மாணாக்கள்பிழைக்கவென்று
கண்பான ஈசலது மரக்காலாகும்
கருவான புத்தீசல் தானெடுத்து
நண்பான பானைக்குள்
சில்லுபோட்டு நலமுடனே குழித்தயிலம் இறக்கிக்கொண்டு
திண்பான தயிலமதில்
கீறைவித்தை தெளிவுடனே முட்டைக்குள் வூறப்போடே
விளக்கவுரை :
2330. போட்டுமே மண்டலந்தான்
சென்றபோது பெருமையுடன் தானெடுத்து மைந்தாபாரு
வாட்டமுடன் சீஷவர்க்கம்
மிகவழைத்து வாகுடனே போசனங்களுண்பதற்கு
கூட்டமுடன் சித்தர்முனி
நாதர்க்கூட்டம் குறிப்புடனே வாயிரம்பேர் சூழ்ந்திருக்க
வாட்டமுடன் மணலதனைக்கொட்டி
மைந்தா பட்சமுடன் விரைதனையே தெளித்திடாயே
விளக்கவுரை :